follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉள்நாடுதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

Published on

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்தலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் நெடுஞ்சாலையில் 174.2 R நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பின்னால் சென்ற லொறியின் சாரதி, சாரதி உதவியாளர் மற்றும் முன்னால் சென்ற லொறியின் சாரதி உதவியாளர் ஆகியோர் காயமடைந்துள்ளதுடன், பின்னால் சென்ற லொறியின் சாரதி உதவியாளர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியின் அங்குனுகொலபலஸ்ஸ சோதனைச் சாவடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று (07) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் செய்தியளித்ததாவது, இன்று சிஸ்தீன் தேவாலயத்தில்...

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

கம்பஹா மாவட்டம் - பியகம பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.    தேசிய மக்கள் சக்தி - 45,227 வாக்குகள் -...

பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரண்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில்...