follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வரும் புதிய நிபந்தனைகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வரும் புதிய நிபந்தனைகள்

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் எதிர்வரும் சர்வதேசப் போட்டிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை இலங்கை அணியின் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூரிய விடுத்துள்ளார்.

அதன்படி, சர்வதேச போட்டிகளில் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினால், பச்சை குத்திக்கொள்வது, நெக்லஸ்கள் மற்றும் காதணிகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் முடியை ஒழுங்காக வெட்டி நேர்த்தியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சனத் ஜயசூரிய தற்காலிகமாக பயிற்சியாளராக இருந்தாலும், தேசிய வீரர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளும் பாடசாலை விளையாட்டு வீரர்களும் இருப்பதாகவும், எனவே இலங்கை அணி ஒழுக்கத்துடன் பயிற்சியளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

“நாங்கள் பெரிய விஷயங்களைச் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் சிறிய விஷயங்களை கூட ஒழுங்காக செய்ய வேண்டும். தற்போது சர்வதேச போட்டிகளுக்கு வரும்போது முடி, காதணி, டாட்டூ போன்றவற்றை வீட்டில் வைத்து விட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...