follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP1அணி சுதந்திரமாக விளையாடும் சூழலை உருவாக்குவதே தனது நோக்கம்

அணி சுதந்திரமாக விளையாடும் சூழலை உருவாக்குவதே தனது நோக்கம்

Published on

இலங்கை அணியில் பல மாற்றங்களைச் செய்ய எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணியின் புதிய தலைவர் சரித் அசங்க தெரிவித்துள்ளார்.

அணி சுதந்திரமாக விளையாடும் சூழலை உருவாக்குவதே தனது நோக்கம் எனத் தெரிவித்திருந்தார்.

சுதந்திரமாக விளையாடும் வீரர்களைப் பார்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என சரித் அசங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (27) நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டிக்கு முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இலங்கை அணியின் தலைவர் சரித் அசங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய தலைவர் சரித் அசலங்க;

“எனது அணியின் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் ஒரு தலைவராக, அதன் பிறகு வரும் விஷயங்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்க வேண்டும். எல்பிஎல் விளையாடுவது ஒரு பெரிய வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் எங்களுக்கு யார் யார் எப்படி விளையாடுவார்கள் என்று தெரியும். அணியில் 04 தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக்...