follow the truth

follow the truth

August, 27, 2025
Homeஉள்நாடுஅடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்க அமைச்சரவை அனுமதி

அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்க அமைச்சரவை அனுமதி

Published on

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும்போது இந்த அடையாள இலக்கம் வழங்கப்படும்.

இந்த அடையாள இலக்கத்தை, தேசிய அடையாள அட்டையை தயாரிக்க பயன்படுத்துவதற்கும், பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து செயல்பாடுகளின்போது, பொது மற்றும் தனியார் துறை சேவைகளை அணுகுவதற்கும் வசதியாக இருக்கும்.

முன்னதாக, ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அடையாள இலக்கங்களை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இனிவரும் காலங்களில் பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கும் அதற்கான அங்கீகரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தகவல் தொகுதி மூலம் இணையவழி ஊடான இலங்கை அடையாள இலக்கத்தை பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு வழங்குவதற்கும், குறித்த இலக்கத்தை உள்ளடக்கி பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மூலம் குறித்த நபர்களின் பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...