follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுஐ. ம. ச எம்.பிக்கள் இன்று முதல் நாடாளுமன்ற அமர்வில்

ஐ. ம. ச எம்.பிக்கள் இன்று முதல் நாடாளுமன்ற அமர்வில்

Published on

நாடாளுமன்றத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் கடந்த இரண்டு தினங்களாக சபை அமர்வுகளை புறக்கணித்திருந்த நிலையில் இன்றைய தினம் வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் அச்சுறுத்தலை அடுத்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பிரதான எதிர்க்கட்சியினர் சபை அமர்வுகளை புறக்கணித்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் சபாநாயகருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, கயந்த கருணாதிலக, முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் சந்தித்திருந்தனர்.  மேலும் இன்று முதல் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...