follow the truth

follow the truth

June, 28, 2025
HomeTOP1பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

Published on

நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமைஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று  பாராளுமன்றில் அறிவித்துள்ளார்

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ச , பந்துல குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ,எம் பிக்களான .கயந்த கருணாதிலக்க , ரவூப் ஹக்கீம் , விஜித்த ஹேரத் , ரஞ்சித் மத்துமபண்டார , சுமந்திரன் , அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் உறுப்பினர்களாவர்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் ,எம்.பிக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டுமெனவும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார்...

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...