follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும்

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும்

Published on

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய அறிவிப்பு இன்னும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, அஹெலியகொட மற்றும் அலபாத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, களுத்துறை, பரகொட பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெள்ள அனர்த்த நிவாரண குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

புளத்சிங்கள பிரதேசத்தில் சிறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெள்ள அனர்த்த நிவாரண குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளதுடன், நிவாரண குழுவினர் பரகொட பிரதேசத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...