follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉலகம்மியன்மாரில் இராணுவத்தினரின் கோரத்தாண்டவம்: 11 பேரை உயிருடன் எரித்துக் கொலை

மியன்மாரில் இராணுவத்தினரின் கோரத்தாண்டவம்: 11 பேரை உயிருடன் எரித்துக் கொலை

Published on

மியன்மாரில் இராணுவத்தினர் கிராமம் ஒன்றுக்குள் புகுந்து 11 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. எனினும், இது குறித்து அந்நாட்டு இராணுவம் விளக்கம் எதுவும் வழங்கவில்லை எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மியன்மாரில் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி அந்த நாட்டு இராணுவம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வரும் இராணுவம், இதுவரை 1,300-க்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொலை செய்துள்ளது. இந்நிலையில், இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வரும் அதே வேளையில் ஒரு சிலர் இராணுவத்துக்கு எதிராக ஆயுதத்தை ஏந்தி போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் மியன்மாரின் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்து சென்ற இராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து, இராணுவ வீரர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்போது கிராமத்தினர் 11 பேரை இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் மியன்மாரில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து இராணுவம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. முன்னதாக கடந்த 5ம் திகதி யாங்கூன் நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...