follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுஇறந்த வேட்பாளருக்கு பதிலாக புதிய ஜனாதிபதி வேட்பாளர்

இறந்த வேட்பாளருக்கு பதிலாக புதிய ஜனாதிபதி வேட்பாளர்

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மறைந்த ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் ஐத்ரூஸ் இல்லியாஸுக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்க மூன்று நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

முகமட் ஐத்ரூஸ் இல்லியாஸ் இறந்துவிட்டதாக இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து, இல்லியாஸ் சார்பாக வேட்பு மனுவில் கையெழுத்திட்டவர், வேறு ஒருவரைப் பரிந்துரைக்க முடியும் என்று கூறினார்.

எவ்வாறாயினும், மொஹமட் ஐத்ரூஸ் இல்லியாஸின் வாக்காளர் அடையாளமும் பெயரும் வாக்குச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ளதால், அதில் மாற்றம் ஏற்படாது என தலைவர் தெரிவித்தார்.

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த முகமட் ஐத்ரூஸ் இல்யாஸ் நேற்று முன்தினம் (22) இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 79.

இதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 38 என ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...