follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சமுதித சமரவிக்ரமவின் கொலைக் கலந்துரையாடல் குறித்து CID விசாரணை

சமுதித சமரவிக்ரமவின் கொலைக் கலந்துரையாடல் குறித்து CID விசாரணை

Published on

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று டுபாயில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவொன்று மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவைக் கொலை செய்ய பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

சமுதித சமரவிக்ரம கடந்த 23ஆம் திகதி பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, தனது முறைப்பாட்டில் வெளிப்படுத்தப்பட்ட கடத்தல்காரர்களின் கலந்துரையாடல் தொடர்பான காணொளியை வெளியிட்ட ஊழல் எதிர்ப்புப் படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் நாமல் குமாரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பொலிஸாரிடம் கடந்த 24ஆம் திகதி வாக்குமூலம் பெறுவதற்கு பிலியந்தலை பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த காணொளிகள் மூலம் தேவையான எந்த நேரத்திலும் இந்த நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு உரிய தகவல்களை வழங்கத் தயார் என நாமல் குமார முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக சமுதித முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் குமார வெளியிட்ட காணொளியில், நாமல் குமாரவின் இலங்கை நண்பர் ஒருவர், “சமுதித ராஜபக்சவின் துணிகளை துவைக்கிறார், எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என அவருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சமுதித சமரவிக்ரம பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு முன்னர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...