follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1இன்று முதல் 2 மாதங்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

இன்று முதல் 2 மாதங்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

Published on

இன்று (01) முதல் ஒக்டோபர் 31 வரை 2 மாதங்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு இன்று முதல் வீசா இன்றி நாட்டை விட்டு வெளியேற 2 மாதம் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது, தொழில் வழங்குநரின் சட்ட அனுமதியின்றி பணியிடத்தை விட்டு வெளியில் இருப்பவர்களுக்கும், பொலிஸ் முறைப்பாடுகளுக்கு உள்ளானவர்களுக்கும் அபராதம் அல்லது சட்டக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆறு மாத தற்காலிக விசா பெற்று புதிய வேலை அல்லது வாய்ப்பு கிடைக்கும்.

அதற்கு, தூதரகத்தால் வழங்கப்பட்ட உங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது அவசரகால வெளியேற்ற அட்டையுடன் குடிவரவு சேவை மையங்களுக்கு வர வேண்டும்.

வெளியேறும் அனுமதிப் பத்திரத்தைப் பெற்று 14 நாட்களுக்குள் ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு வெளியேற வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

இன்று (10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...