follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP2ஷேக் ஹசீனா மீது நூற்றுக்கணக்கான வழக்குகள்

ஷேக் ஹசீனா மீது நூற்றுக்கணக்கான வழக்குகள்

Published on

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சில நாட்களில், அவர் மீதான முதல் வழக்கு டாக்கா நீதிமன்றத்தில் கடந்த 13ம் திகதியும்,100வது வழக்கு பங்களாதேஷ் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் கடந்த 29ம் திகதியும் தாக்கல் செய்யப்பட்டது.

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொலைக் குற்றச்சாட்டின் கீழ் 63 வழக்குகளும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் கீழ் 7 வழக்குகளும், கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் 3 வழக்குகளும், மேலும் 2 வழக்குகள் மற்ற கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அரசு வேலை ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, கடந்த 5ம் திகதி ஷேக் ஹசீனாவின் அரசு இராஜினாமா செய்தது, அதன்பிறகு, ஜூலை மாதம் முதல் போராட்டங்கள் முடிவடைவதற்குள், ஷேக் ஹசீனா சட்டச் சிக்கலில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

இராஜினாமாவுக்குப் பிறகு, ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் பெற்றார். இந்தியாவில் தஞ்சம் பெற்ற பிறகு, டாக்டர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஷேக் ஹசீனாவின் இராஜதந்திர கடவுச்சீட்டை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்தது மற்றும் அவர் இந்தியாவில் இருப்பதற்கான சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குள்ளாக்கியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...