follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉலகம்பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் மீதான சமூக ஊடக தணிக்கை

பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் மீதான சமூக ஊடக தணிக்கை

Published on

உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிடுவதைத் தடுக்க அனைத்து அரசாங்க ஊழியர்களும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, 1964 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் (நடத்தை) விதிமுறைகளின் கீழ், அரசு ஊழியர்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாட்டின் அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, அரசு ஊழியர்கள் அனுமதியின்றி எந்த சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, “அரசாங்கத்தின் நற்பெயரை பாதிக்கும் கருத்துகளையோ, உண்மைகளையோ தெரிவிக்க அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றும், கொள்கைகள், முடிவுகள், தேசியத்திற்கு எதிராக பேசக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு ஊழியர்கள் தங்களது கருத்துக்களையோ அரசியல் கருத்துக்களையோ சமூக ஊடக தளங்களில் அனுமதியின்றி பரப்ப முடியாது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...