follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP2வரிசை யுகமாகும் பங்களாதேஷ் - IMF கடன் வழங்காவிடின் வங்குரோத்து

வரிசை யுகமாகும் பங்களாதேஷ் – IMF கடன் வழங்காவிடின் வங்குரோத்து

Published on

பங்களாதேஷில் போராட்டத்தின் பின்னர் நிறுவப்பட்ட புதிய அரசாங்கத்தின் கீழ், நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக ஆடைத் தொழில் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது.
இந்த ஆண்டு நாட்டின் ஆடை ஏற்றுமதி இருபது சதவீதம் குறையும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷில் தற்போது காபந்து அரசாங்கத்தின் கீழ் ஆட்சி நடைபெற்று வருகின்ற போதிலும், நாட்டில் வன்முறைகள் தொடர்கின்றன.
பங்களாதேஷ் தனது ஏற்றுமதி வருவாயில் எண்பது சதவீதத்தை ஆடை ஏற்றுமதியில் இருந்து ஈட்டுகிறது.
இதற்கிடையில், சம்பள உயர்வு கோரி தொழிலாளர்களின் போராட்டங்கள் காரணமாக அறுபது ஆடை தொழிற்சாலைகள் மூட முடிவு செய்யப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்கள் அந்த தொழிற்சாலைகளை ஆபிரிக்க பகுதி அல்லது சந்தைகளுக்கு மாற்ற தயாராக உள்ளனர்.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் பங்களாதேஷ், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து எட்டு பில்லியன் டாலர் கடனைக் கோரியுள்ளது.
அவ்வாறு செய்யாவிட்டால், மூன்று பில்லியன் டாலர்கள் கடனை திருப்பிச் செலுத்தும் அபாயம் உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையால் அதிகமான பொருட்களை சேகரிக்க சிலர் அக்கறை காட்டுவதால், சில பகுதிகளில் மருந்து, எரிபொருள், அத்தியாவசிய உணவு போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...