follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய போலந்து நோக்கி குழு

கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய போலந்து நோக்கி குழு

Published on

கடவுச்சீட்டுகள் தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று போலந்து சென்றுள்ளது.

இ-பாஸ்போர்ட் டெண்டரால், குடிவரவுத் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டு, திணைக்களம் அருகே நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் ஆன்லைன் மூலம் திகதி பதிவு செய்யும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், புதிய கடவுச்சீட்டுகளின் கையிருப்பு ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்படும் என திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி அன்றைய தினம் இலங்கையில் 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் பெறப்பட உள்ளன.

அதன் பிறகு, சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நாடு மேலும் 100,000 வெற்று கடவுச்சீட்டுகளைப் பெறும்.

எவ்வாறாயினும், 05 வருட காலத்திற்குள் நாடு 50 இலட்சம் வெற்று கடவுச்சீட்டுகளை கையிருப்பில் வைத்திருக்கப் போகிறது.

புதிய வெற்று கடவுச்சீட்டில் முன் பக்கம் கறுப்பு நிறத்தில் போலந்தில் தயாரிக்கப்படுவதாகவும் குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய மேலும் தெரிவித்திருந்தார்.

இதன்படி, இந்த கடவுச்சீட்டுகளின் உற்பத்தி செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழு போலந்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...