follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1எந்த வரிசையில் நிற்பது? LGBTQ கேள்வி

எந்த வரிசையில் நிற்பது? LGBTQ கேள்வி

Published on

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 21ஆம் திகதியன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைக்கும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கை, புதன்கிழமை (18) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது. அதற்கு பின்னர் எவரும் பிரசார நடவடிக்கையில் ஈடுபடமுடியாது.

இந்நிலையில், வாக்களிப்பு தினத்தன்று வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் தாங்கள் எந்தவரிசையில் நிற்பது என சமபால் உறவாளர்கள் (LGBTQ) கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒருசில வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் இருபாலாருக்கும் தனித்தனி வரிசைகள் அமைக்கப்படும். சில வாக்குச்சாவடியில் இருபாலாரும் ஒரே வரிசையில் சென்றே வாக்களிப்பார்கள்.

இந்நிலையில், இருபாலாரும் செல்லும் வரிசையிலேயே சமபால் உறவாளர்களும் சென்று வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எந்த வரிசையில் சென்று வாக்களிப்பது என சமபால் உறவாளர்களின் சங்கத்தால் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தை ஆராய்ந்ததன் பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஆணைக்குழு அறிவித்துள்ளது,

எனினும், கலாசாரம் மற்றும் மதம் காரணமாக, கிழக்கு மாகாணத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...