follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉலகம்சீனாவில் புயலால் 100 விமானங்கள் இரத்து

சீனாவில் புயலால் 100 விமானங்கள் இரத்து

Published on

சீனாவில் உருவான பெபின்கா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி ஷாங்காய் நகரில் புயல் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்ததாக அந்நாட்டு செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

அப்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் அந்த பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளதாகவும், இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து 10,000 இற்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே புயல் காரணமாக அங்கு மோசமான வானிலை நிலவியதுடன் இதனால் சுமார் 100 விமானங்கள் அங்கு இரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும்வரை மேலும் 500 விமானங்கள் இரத்து செய்யப்பட உள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...