follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை

Published on

சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் அடுத்த மதிப்பாய்வு எதிர்காலத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இதேவேளை புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற நம்புவதாகவும் சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

வரி வருவாயை அதிகரிப்பது மற்றும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பல பொருளாதார சீர்திருத்தங்களை இலங்கை மேற்கொண்டது.

எவ்வாறாயினும், சாதாரண மக்களுக்கு தாங்க முடியாத சிரமங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மீள் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடனான இலங்கையின் ஒப்பந்தத்தை வரவேற்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இருதரப்பு கடன் வழங்குபவர்களுக்கு அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் அனுமதி தேவைப்படுகிறது.

இது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...