follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

Published on

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.

பெலவத்தை திசையிலிருந்து பாராளுமன்ற வீதி ஊடாக பொரளை நோக்கி பயணித்த போது, ​​டிபென்டர் வாகனம் தியவன்னா சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளது.

விபத்து நடந்த போது சாரதி மட்டும் அங்கு இருந்துள்ள நிலையில், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இராணுவத்தினரின் தலையீட்டின் பின்னர், ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் வாகனம் மீட்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை...

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...