follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்திற்கு.. - ஜோசப் ஸ்டார்லிங்கின் கூற்றின் உண்மைத்தன்மை

ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்திற்கு.. – ஜோசப் ஸ்டார்லிங்கின் கூற்றின் உண்மைத்தன்மை

Published on

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மற்றுமொரு ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்புக்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்துள்ளார் என பல ஊடகங்கள் இன்று (26) காலை செய்தி வெளியிட்டிருந்தன.

நாமும் இந்த செய்தியினை வெளியிட்டிருந்த நிலையில், இந்தச் செய்தி உண்மையா இல்லையா என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ள நாம் இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லிங்கிடம் வினவியிருந்தோம்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தத் தயார் என்று கூறியதில் உண்மையில்லை என்ன என்று அவர் தெரிவித்திருந்தார்.

அங்கு அவர் அப்படிச் சொல்லவில்லை என்று கூறினார்.

புதிதாக பதவியேற்ற அரசால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய வேலைத்திட்டத்தின் போது ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக மாத்திரம் தெரிவித்தார்.

இருப்பினும், ஜோசப் ஸ்டார்லிங் தெரிவிக்கையில் தற்போது அவசர வேலைநிறுத்தத்திற்கு தயாராக இல்லை என்றும் கூறினார்.

இணைப்புச் செய்தி 

“புதிய அரசின் அமைச்சின் கீழுள்ள செயலாளர்களில் எமக்கு திருப்தியில்லை”
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...