follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"LECO வாகனங்களை தேர்தல் பணிகளுக்காக எடுக்கவில்லை, எந்தவொரு விசாரணைக்கும் தயார்" நாமலின் ஊடகப் பிரிவு

“LECO வாகனங்களை தேர்தல் பணிகளுக்காக எடுக்கவில்லை, எந்தவொரு விசாரணைக்கும் தயார்” நாமலின் ஊடகப் பிரிவு

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் நலன்புரித் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனம் ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதும் அடிப்படையற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் ஷரோன் சமரநாயக்க ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அநுராதபுரத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நடத்தப்பட்ட முதலாவது பிரச்சாரக் கூட்டத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் (LECO) வாகனம் பயன்படுத்தப்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் லங்கா மின்சார தனியார் நிறுவனம் (LECO) நடத்திய ஆரம்பக்கட்ட உள்ளக விசாரணையில், இந்த குற்றச்சாட்டு அரசியல் போட்டியின் அடிப்படையிலான பொய்யான குற்றச்சாட்டு என இது தொடர்பிலான எந்தவொரு விசாரணைக்கும் பூரண ஒத்துழைப்பினை வழங்க நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக ஷரோன் சமரநாயக்க ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...