follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1டெங்கு ஒழிப்புக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு

டெங்கு ஒழிப்புக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் Andres Marcelo Gonzales Gorrido ஆகியோர் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர உறவுகள் மற்றும் நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது கியூபா தூதுவர், அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை பாராட்டிய இலங்கைக்கான கியூபா தூதுவர், இலங்கையுடன் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்த கியூபா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், டெங்கு ஒழிப்புக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெங்கு நோயை அடக்குவதில் கியூபா அடைந்துள்ள வெற்றியை சுட்டிக்காட்டிய இலங்கைக்கான கியூபா தூதுவர், இலங்கையில் டெங்கு நோயை ஒழிக்கும் நோக்கில் பொது சுகாதாரத் திட்டங்களுக்கு கியூபா அரசாங்கம் ஒத்துழைக்கவும் தேவையான நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...