follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP1முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளது

முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளது

Published on

முட்டையின் சில்லறை விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அண்மைக்காலமாக 30 ரூபாவாக குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

“பெரும்பாலான மொத்த வியாபாரிகள் முட்டைகளை எடுத்துச் சென்று முட்டைகளை விற்பனை செய்தனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பாரிய நிவாரணம் கிடைத்தது. தற்போது, ​​உபரி உற்பத்தி பொருட்கள் சந்தையை விட்டு வெளியேறியுள்ளன. தற்போது உற்பத்தியாகும் தினசரி முட்டைகள்தான் சந்தைக்கு வருகின்றன. ஆனால் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. இது செயற்கையாக நடக்கிறதா என்ற கேள்வி எங்களுக்கு உள்ளது..”

தற்போது சந்தையில் வெள்ளை நிற முட்டை ஒன்று 40-45 ரூபாவுக்கும் பழுப்பு நிற முட்டை ஒன்று 45-48 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது...

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பதிவு தற்காலிகமாக நிறுத்தம்

இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத் துறையின் கீழ் இயங்கும் புனரமைப்பு துணைத் துறையில் வேலைவாய்ப்புக்காக தகுதிவாய்ந்த தொழிலாளர்களை பதிவு செய்யும்...