follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1தேர்தல் பணிக்கு சமூகமளிக்காதோருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்

தேர்தல் பணிக்கு சமூகமளிக்காதோருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்

Published on

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதனைத் தெரிவிக்காவிட்டால் அது ஒரு இலட்சம் ரூபா அபராதம் அல்லது மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்குகளுக்கு விண்ணப்பிக்காமை மற்றும் குறைபாடுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை என்பன தேர்தல் கடமைகளில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஒரு காரணமல்ல என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் கூறுகிறார்.

தேர்தல் பணிக்கு வருவதற்கான நியமனக் கடிதம் பெறும் அனைத்து அலுவலர்களும் உரிய தேர்தல் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும், தங்களது வழக்கமான பணியிடத்திற்குச் சென்று வருகைப் பதிவு சான்றிதழை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காத உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஒத்துழைக்க மறுப்பவர்கள் அல்லது தவறியவர்கள் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...