follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மூன்று வேட்பாளர்கள் தங்களின் ஜனாதிபதி தேர்தல் செலவுகள் குறித்து தெரிவிக்கவில்லை

மூன்று வேட்பாளர்கள் தங்களின் ஜனாதிபதி தேர்தல் செலவுகள் குறித்து தெரிவிக்கவில்லை

Published on

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் நேற்று (13) இறுதிக்குள் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, 3 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வேட்பாளர்களுக்கு செலவின அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (13) நள்ளிரவுடன் முடிவடைந்தது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதேவேளை, இன்று (14) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, 28 அரசியல் கட்சிகள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தலைவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் அதற்கான செலவின அறிக்கைகளை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்னர் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி, உரிய காலத்திற்குள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...