follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழப்பு

ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழப்பு

Published on

கொலன்னாவயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

காட்டு யானைகள் மோதியதில் ரயில் எஞ்சின் மற்றும் 4 எரிபொருள் தாங்கிகள் தடம்புரண்டுள்ளதாக அனுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொலன்னாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் மின்னேரியா 146 ஆவது மைல்கல் பகுதியில் இன்று(18) அதிகாலை 3.30 மணியளவில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்காரணமாக மட்டக்களப்பில் இருந்து புறப்பட்ட மீனகயா கடுகதி ரயில் பொலன்னறுவையில் நிறுத்தப்பட்டதுடன், இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை பயணிக்கவிருந்த ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...