follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் - புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் – புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு

Published on

புறக்கோட்டையில் உள்ள அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் நேற்று நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது பல வகையான அழகுசாதனப் பொருட்களை நுகர்வோர் விவகார அதிகார சபை கைப்பற்றியுள்ளது.

தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை அகற்றுவதற்காக இவை பயன்படுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், இந்த அழகுசாதனப் பொருட்களை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பெற முடியும் எனவும் அவற்றை பதிவு செய்யப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே விற்பனை செய்ய முடியும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“வெள்ளையாக இருக்க வேண்டும் என்று பெரிய ஆசை உள்ளது. இளம்பெண்கள் மட்டுமின்றி ஆண் பிள்ளைகளும் இந்த அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இது உடலுக்கு நல்லதல்ல. புறக்கோட்டையில் உள்ள 16 கடைகளில் இந்த அழகுசாதன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் சஞ்சீவ வீரசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...