follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2"திசைகாட்டி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடவில்லை"

“திசைகாட்டி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடவில்லை”

Published on

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடும் மக்களுக்கு ஆதரவளிப்பேன் என்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த வாக்குகளில் 43% வாக்குகளை அநுர குமார திஸாநாயக்க பெற முடியாமல் போனாலும் கம்பஹா மாவட்டத்தில் 55% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றமையே தான் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ அதிகூடிய வாக்குகளைப் பெற்றதாகவும், திசைகாட்டிக்கு சென்றவர்களில் பெரும்பாலானோர் தனது முகாமைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை இந்த முடிவு உறுதிப்படுத்துவதால், நாட்டை உருவாக்க திசைகாட்டிக்கு வாய்ப்பளிக்க இம்முறை போட்டியிடப் போவதில்லை என்றும், பின்னர் 75 வருட சாபம், 225 திருடர்கள் போன்ற கோஷங்களை இனிமேல் முழங்க முடியாது என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...