follow the truth

follow the truth

June, 22, 2025
Homeஉள்நாடுபாடசாலை செல்லும் பிள்ளைகளை கொண்ட பெற்றோர்கள் கவனத்திற்கு

பாடசாலை செல்லும் பிள்ளைகளை கொண்ட பெற்றோர்கள் கவனத்திற்கு

Published on

யாழ்.மாவட்டத்தில் பாடசாலைகளை இலக்கு வைத்து அதிக விலைக்கு பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட இருவர் போதைப்பொருள் கையிருப்புடன் இரண்டு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று (24) சுன்னாகம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை கைது செய்த போது, ​​அவரிடம் 840 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று (23) யாழ் மானிப்பாய் பகுதியில் மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் ஒருவர் கைது செய்யப்பட்டு சோதனையில் 1400 போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்திலும் நகரிலும் பல பாடசாலைகளுக்கு அருகில் பொதுமக்கள் வேடமணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை...

இஸ்ரேலில் உள்ள 5 இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்ப கோரிக்கை

இஸ்ரேலில் தொழில்புரியும் 5 இலங்கைத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இதுவரையில்...

கோரிக்கைகளைத் தொடர்ந்து பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவுக் கட்டணம் குறைப்பு

பாராளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர்...