follow the truth

follow the truth

June, 22, 2025
Homeஉலகம்ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் - உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் - ஐ.நா. கவலை

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் – ஐ.நா. கவலை

Published on

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் குட்டெரெஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும். மேலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும்.

இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். ராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கை.” என்று தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரேசிலில் நடுவானில் இராட்சத பலூன் தீப்பிடித்து விபத்து – 8 பேர் பலி

பிரேசிலில் எயார் பலூன் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலூனில் 21 பேர் இருந்ததாகவும், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில்...

அமெரிக்கா மீது தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும்...

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளப்...