follow the truth

follow the truth

August, 18, 2025
HomeTOP1கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் தற்போதைய அரசின் வேலைத்திட்டம் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது

கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் தற்போதைய அரசின் வேலைத்திட்டம் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது

Published on

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் நேற்று (21) நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன் பெரஹெராவின் நூற்றாண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்றார்.

ஆன்மீக ரீதியில் வீழ்ச்சிகண்ட சமூகத்தை பௌதீக ரீதியாக நாம் எவ்வளவு அபிவிருத்தி செய்தாலும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் நெறிமுறை மற்றும் ஆன்மீகப் பண்புகளைக் கொண்ட பிரஜைகளால் மாத்திரமே, நாட்டின் கலாசார சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பணம் அல்லது அதிகாரத்தினால் வாழ்வை இழந்த சமூகத்திற்கு, ஆன்மீக வாழ்வளிக்க, பௌத்த கலாசாரம் வலுவான அடித்தளத்தை வழங்குகின்றது என்று இங்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆட்சியாளர்கள் மக்களை நேசிப்பது போல், மக்களுக்கும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதற்கு பௌத்தம் வழி காட்டியுள்ளது என்றும், இன்றைய சமூகத்தில் பெறுமதிமிக்க கலாசார விடயங்கள் விடுபட்டுள்ளதாகவும், மீண்டும் அந்த புராதன கலாசார பொக்கிஷங்களை கொண்டுவந்து ஆன்மீக வாழ்வுடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் பெரஹெரா நிறுத்தப்படும் என சிலர் கூறினாலும், கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...