follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்உக்ரைன், காஸா, லெபனானில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்

உக்ரைன், காஸா, லெபனானில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்

Published on

உடனடி போர் நிறுத்தத்தின் மூலம் காஸா எல்லைகளில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். நிபந்தனைகளின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். மனிதாபிமான உதவிகளைத் திறம்பட வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையற்றும் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

எல்லைகளைக் கடந்து அமைதி தேவை என பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடம் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தினார்.

காஸாவில் மாத்திரமல்லாமல் லெபனானிலும் உக்ரைனிலும் அமைதி திரும்ப வேண்டும். பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701 -ஐ லெபனானில் அமுல்படுத்துவதை நோக்கி நாம் நகர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் உட்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றிருந்தனர்.a

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...