follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுயானை - மனித மோதலுக்கு தீர்வு காண நடவடிக்கை

யானை – மனித மோதலுக்கு தீர்வு காண நடவடிக்கை

Published on

யானை – மனித மோதலுக்கு தீர்வு காண்பதற்காக விரைவான மற்றும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளதாக சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

வனஜீவராசிகள், வனவளங்கள் மற்றும் புகையிரத திணைக்களங்களின் தலைவர்களுடன் சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், ரயிலில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ரயில்வே பொது முகாமையாளர், இதுவரையிலும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணிக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் பொதிகளை ஏற்றி செல்லும் ரயில்களின் நேர அட்டவணை பகல் நேரமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், புகையிரத பாதையில் இருந்து 10 மீற்றர் தூரம் வரை யானைகள் கடக்கும் இடங்களை தெளிவாக கண்காணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
.
பயிற்சித் திட்டங்களை முறைப்படுத்துவதற்கான பொறிமுறை, 1992 விசேட தொலைபேசி அழைப்பு சேவை மற்றும் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகளுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தி விரைவான தீர்வுகளை வழங்குவதற்கான பொறிமுறையின் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வனஜீவராசிகள் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...