follow the truth

follow the truth

June, 23, 2025
HomeTOP1அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தீர்மானத்தை சட்டப்படியே செய்தோம்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தீர்மானத்தை சட்டப்படியே செய்தோம்

Published on

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக தாம் சமர்ப்பித்த பத்திரத்தை அமைச்சரவை நிராகரித்தால், அந்த பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியிலிருந்து பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் பொதுக்கூட்டம் இன்று நீர்கொழும்பில் நடைபெற்றது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கினார்.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு உரிய பிரேரணையை முன்வைப்பதற்கு அமைச்சரவை ஏகமனதாக தீர்மானம் எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இவை அனைத்தும் 2025 நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் சேர்க்கத் தயார் செய்யப்பட்டவை. 2025 ஒதுக்கீட்டுச் சட்டத்தை நாங்கள் முன்வைப்பதற்கு முன்பே தேர்தலை முடித்திருக்க வேண்டும். IMF அமைப்புடன் பேசியிருக்க வேண்டும். நாங்கள் இணங்குவதற்கு முன்னர், எமது திறைசேரி செயலாளர், எனது ஆலோசகர் கலாநிதி சமரதுங்க மற்றும் எனது செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் பேசினேன்.

நான் யாருடனும் பேசவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

இல்லை, அதாவது நாங்கள் இதை செய்தோம். இந்த தீர்ப்பு கிடைக்கும் வரை, அதை உள்ளிட வேண்டும். பின்னர் தீர்ப்பை இரத்து செய்யுங்கள். அது உங்களுடைய தீர்மானம். அதற்கு நான் பொறுப்பல்ல.

என்னால் இவற்றை சொல்ல முடியாது. இது நானல்ல அரசு. இந்த முடிவை தவறு என்று சொல்லாதீர்கள். பின்னர் முடிவை மாற்ற முழு அதிகாரம் அரசுக்கே உள்ளது. இரத்து செய்யுங்கள் என்றே கூறுகிறோம். ஜனாதிபதியும் அதையே தெரிவித்தார்.

இந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர்களால் எந்தப் பயனும் இல்லை, அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது, அதை நடைமுறைப்படுத்தச் சொல்கிறேன்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள FAO கப்பலுக்கு அனுமதி

இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை...

ஜொன்ஸ்டனின் வழக்கு விசாரணை ஜூலை 30 வரை ஒத்திவைப்பு

கடந்த ஆட்சிக் காலத்தில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக,...

5 மாதங்களில் 2 தொன் போதைப்பொருட்கள் கைப்பற்றல்

கடந்த 5 மாதங்களில் சுமார் 2 தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...