கடந்த ஆட்சிக் காலத்தில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக, சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பின்னர், மேலதிக வழக்கு விசாரணையை ஜூலை 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் ஒரு சாட்சியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு அழைப்பாணை பிறப்பிக்க உத்தரவிட்டார்.