follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1அம்புலுவாவ கேபிள் கார் திட்டம் - இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

அம்புலுவாவ கேபிள் கார் திட்டம் – இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

Published on

அம்புலுவாவ கேபிள் கார் வேலைத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையிடுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை நீடிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(29) உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ராஜகிரியவில் அமைந்துள்ள எம்பர் எட்வென்ச்சர் தனியார் நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இடையூறுகள் காரணமாக குறித்த திட்டத்தினை குறித்த காலத்துக்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, திட்டத்திற்கு இடையூறுகள் மற்றும் முறையற்ற தலையீடுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

கம்பளை பிரதேச செயலாளர் தில்ருக்ஷி ஜயரத்ன, இலங்கை சுற்றுலா சபை மற்றும் முதலீட்டு சபை உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...