follow the truth

follow the truth

August, 7, 2025
HomeTOP2இராணுவ வீரர்களின் சம்பளத்தை உயர்த்த நாங்கள் தீர்மானித்திருந்தோம்.. அதை நடைமுறைப்படுத்துங்கள்

இராணுவ வீரர்களின் சம்பளத்தை உயர்த்த நாங்கள் தீர்மானித்திருந்தோம்.. அதை நடைமுறைப்படுத்துங்கள்

Published on

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முப்படையினரின் மாதாந்த சம்பளத்துடன் முப்படையினரின் உணவுப் பொருட்களையும் இணைப்பதற்கு எமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உணவுக்காக வழங்கும் தொகையை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என முப்படை வீரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

எனவே முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்களின் கோரிக்கைகளை தற்போதைய அரசாங்கம் வழங்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ஆயுதப் படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் சம்பளத்தை தற்போதைய பொருளாதாரத்திற்கு ஏற்ப அதிகரிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் தற்போதைய சம்பள முறைமையில் திருத்தம் செய்ய பிரமித பண்டார தென்னகோன் அப்போது தீர்மானித்திருந்தார்.

இதன்படி தற்போதைய அரசாங்கம் தேசத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய முப்படையினரின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டுமென பிரமித பண்டார தென்னகோன் கேட்டுக்கொள்கிறார்.

இது தொடர்பில் தாம் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டதாக பிரமித பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...