follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது - திலித் ஜயவீர

மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது – திலித் ஜயவீர

Published on

போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“.. மஹிந்த ராஜபக்ஷவை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. நமது அரசியல் கதை என்னவாக இருந்தாலும், அவரை மறக்க முடியாது. அவர் ஒரு யுக மனிதர்.

நாட்டை போரில் இருந்து காப்பாற்றிய தலைவரே மஹிந்த ராஜபக்ஷ. எனவே அவரது பாதுகாப்பை நீக்குவது சரியல்ல.

2008ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்க வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பதை நான் அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அது ஏன்… போரின் கடைசி நாட்களில் போரை நிறுத்த நினைத்தார்கள், ஏனெனில் இந்நாட்டு தமிழ் மக்கள் மீதுள்ள அன்புக்காகவோ அல்லது இந்நாட்டின் பிற இனத்தவர் மீது கொண்ட அன்பிற்காகவோ அல்ல. NGOக்களின் சகவாழ்வுக்காக.

இந்நாட்டில் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்தவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, கவனிப்பே அன்றி வேறில்லை” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...