follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2NPP இல் அமைச்சுப் பதவிகளை பெறுவது குறித்து சுமந்திரன் பச்சைக்கொடி

NPP இல் அமைச்சுப் பதவிகளை பெறுவது குறித்து சுமந்திரன் பச்சைக்கொடி

Published on

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. முன்னர் புதிய அரசுகள் பதவி வகுக்கும் போது அவர்களுடன் இணையக்கூடாது என்று பலரும் நினைத்த காலங்கள் உண்டு. அது கட்சியின் நிலைப்பாடு அல்ல.. ஆனால் எனது தனிப்பட்ட கருத்து அவர்களுடன் இணைவதில் எவ்வித பிரச்சினையையும் நான் கண்டதில்லை. நல்லவற்றினை நாம் வரவேற்க வேண்டும்.

சந்திரசேகரனின் விளக்கம் பற்றி நான் ஏன் வீணாக அலட்டிக் கொள்ள வேண்டும்? அநுர குமார திசாநாயக்கவுடன் ஆறு வருடங்களுக்கு முன்னர் நான் மே தினமன்று யாழ்பாணத்தில் சிவப்பு சட்டை அணிந்து நடந்த படம் இருக்கிறது.. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் காலியில் இருந்து கொழும்புக்கு நடை பாதையாக பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் நடந்து வந்த படமும் இருக்கின்றது. ஆகவே மக்கள் உரிமைகளுக்காக தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்களுக்காக பலவிடயங்களில் நாங்கள் சேர்ந்து பயணித்த காலங்கள் நிறையே இருக்குது.

அதற்காக அமைச்சுப்பதவிகளை குறிவைப்பதோ ஓடிச்சென்று பக்கத்தில் நின்று படம் எடுக்கும் செயற்பாடுகளிலோ நாங்கள் ஈடுபடுவதில்லை. நாங்கள் ஈடுபடுவதாக இருந்தால் ஒரு ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்கு நாங்கள் சேர்ந்து பயணிப்போம். பதவிகளுக்காகவோ கதிரைகளுக்காகவோ எங்கள் கட்சி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது. இது சந்திரசேகரனுக்கு தெரியாவிட்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...