follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் திட்டம் நிறுத்தம்

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் திட்டம் நிறுத்தம்

Published on

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்குவதை நிறுத்திவிட்டு அதன் அத்தியாவசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள சமூக மாற்றத்திற்கான மக்கள் ஆணையின் அடிப்படையில் வலுசக்தி துறையில் உரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவையின் தரத்தை உயர்த்துவதற்கும், வாடிக்கையாளர் திருப்திக்கான உயர் மதிப்பைப் பேணுவதற்கும், நிறுவனத்திற்கு நியாயமான லாபத்தைப் பெறுவதற்கும், அதில் சமூகப் பொருளாதாரத்திற்கு உயர் நன்மைகளைப் பெறுவதற்கும், ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அவ்வப்போது மதிப்பீடுகளை மேற்கொள்வதன் மூலம் நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், மின்சாரச் சட்டத்தில் திருத்தம் செய்யவும், அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள், பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்பை தனியார்மயமாக்காமல் முழுவதுமாக அரசாங்கத்திற்கு சொந்தமான சுயாதீன அமைப்பில் செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...