follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக ரயில் சேவை

வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக ரயில் சேவை

Published on

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக பல ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை இயங்கும் யாழ்தேவி புகையிரதமும், கோட்டையிலிருந்து திருகோணமலை வரை இயங்கும் இரவு அஞ்சல் புகையிரதமும் இன்று (13), நாளை (14) மற்றும் நாளை மறுதினம்(15) மேலதிக பெட்டிகள் சேவையில் இயங்கும் என புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேர்தலை முன்னிட்டு விசேட ரயில் இயக்கப்படாது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...