follow the truth

follow the truth

June, 28, 2025
HomeTOP2தீயணைப்பு வீரர்களின் விடுமுறைகள் இரத்து

தீயணைப்பு வீரர்களின் விடுமுறைகள் இரத்து

Published on

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு ஏதேனும் அவசரச் சூழலை எதிர்கொள்ளும் வகையில் கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் இன்று (13) முதல் (15) வரைவிடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக பிராந்திய தீயணைப்பு அதிகாரி ரோஹன நிஷாந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

இதன்படி, தீயணைப்பு சேவை திணைக்கள தலைமையகம், ஹெட்டியாவத்தை, க்ரேன்ட்பாஸ், வெள்ளவத்தை கோட்டை மற்றும் மடிவெல உப நிலையங்களில் உள்ள சுமார் 300 ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதான வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் கொழும்பு றோயல் மற்றும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி மைதானங்களில் உப சேவை நிலையங்களுக்கு மேலதிகமாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு அம்பியூலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஏறக்குறைய 50 தீயணைப்பு வாகனங்கள், 12 உயிர்காக்கும் வாகனங்கள் மற்றும் 5 ஆம்புலன்ஸ்கள் எந்த நேரத்திலும் அனுப்பிவைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ரோஹன நிஷாந்த சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்டூடியோக்களை இழுத்து மூடும் Microsoft நிறுவனம் – பயத்தில் 2000 ஊழியர்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில்...

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார்...

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம்

ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணுஆயு...