follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2தீயணைப்பு வீரர்களின் விடுமுறைகள் இரத்து

தீயணைப்பு வீரர்களின் விடுமுறைகள் இரத்து

Published on

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு ஏதேனும் அவசரச் சூழலை எதிர்கொள்ளும் வகையில் கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் இன்று (13) முதல் (15) வரைவிடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக பிராந்திய தீயணைப்பு அதிகாரி ரோஹன நிஷாந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

இதன்படி, தீயணைப்பு சேவை திணைக்கள தலைமையகம், ஹெட்டியாவத்தை, க்ரேன்ட்பாஸ், வெள்ளவத்தை கோட்டை மற்றும் மடிவெல உப நிலையங்களில் உள்ள சுமார் 300 ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதான வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் கொழும்பு றோயல் மற்றும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி மைதானங்களில் உப சேவை நிலையங்களுக்கு மேலதிகமாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு அம்பியூலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஏறக்குறைய 50 தீயணைப்பு வாகனங்கள், 12 உயிர்காக்கும் வாகனங்கள் மற்றும் 5 ஆம்புலன்ஸ்கள் எந்த நேரத்திலும் அனுப்பிவைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ரோஹன நிஷாந்த சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...