follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து பிரதிநிதிகள் இணக்கம்

தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து பிரதிநிதிகள் இணக்கம்

Published on

நாட்டில் விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் பொதுச் சேவை மேம்பாட்டுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நெதர்லாந்தின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் இவான் ருட்ஜென்ஸ் உள்ளிட்ட நெதர்லாந்து தூதுக்குழுவினர், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினர்.

நெதர்லாந்தில் உள்ள Wageningen பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Wageningen University & Research) கடந்த 7 ஆண்டுகளாக உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள நிலையான பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது.

விவசாயம், விவசாயம்-சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இலங்கையின் முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து புதிய ஒத்துழைப்பு திட்டங்களை ஆரம்பிக்க மேற்படி பல்கலைக்கழகம் எதிர்பார்த்துள்ளது.

அதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்களை அறிந்துகொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஒத்துழைப்புடன் விளைச்சல் மற்றும் நிலையான உணவுக் கட்டமைப்புக்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்துகிறது.

இதன்படி, இந்த நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதுடன் தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்கவும் நெதர்லாந்து பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...