follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகாய்ச்சல் பரவல் - இராணுவ பயிற்சி முகாமின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

காய்ச்சல் பரவல் – இராணுவ பயிற்சி முகாமின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Published on

காய்ச்சல் பரவல் காரணமாக மன்னார், விடத்தல்தீவு – பெரியமடு பகுதியில் உள்ள இராணுவ பயிற்சி முகாமின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த இராணுவ பயிற்சி முகாமில் பயிலும் இராணுவ சிப்பாய்கள் தனிமைப்படுத்தபட்டுள்ளதாக இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் முதல் பயிற்சியில் ஈடுபட்ட சிப்பாய்களிடையே காய்ச்சல் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, 25 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த நோய் நிலைமை பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...