follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்மிகவும் மோசமான நிலையில் டெல்லி காற்று மாசு

மிகவும் மோசமான நிலையில் டெல்லி காற்று மாசு

Published on

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால், சுவாச பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

டெல்லியில் நடப்பு பருவத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று காற்று மாசு தரக்குறியீடு 481 என்ற அளவில் பதிவாகியுள்ளது. காற்றின் தரக் குறியீடு 100ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்றது இல்லை என்ற நிலையில், டெல்லியில் காற்று மாசு 450ஐ கடந்துள்ளது.

ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய 160 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் 7 விமானங்கள் முற்றிலும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று 30 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...