follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP2தேசியப்பட்டியல் விவகாரத்தில் SJB குட்டை குழம்பியது

தேசியப்பட்டியல் விவகாரத்தில் SJB குட்டை குழம்பியது

Published on

இந்த வருடம் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியினுள் கடும் முரண்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அந்த ஆசனத்திற்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், டலஸ் அலபெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஆசனத்திற்கு எரான் விக்ரமரத்ன, மனோ கணேசன் மற்றும் பலர் சேர்க்கப்பட வேண்டும் என்று மற்றொரு குழுவினர் கருதுகின்றனர்.

சுஜீவ சேனசிங்கவின் நியமனத்துக்கும் ஒரு குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இத்தேர்தலில் ஐந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை அக்கட்சி வென்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் இன்றும் இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: விசாரணை அறிக்கை அடுத்த வாரம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணையை முன்னெடுத்துவரும் ஐந்து பேர் கொண்ட குழுவின்...

பயனர்கள் போனில் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் சேமிக்கும் மெட்டா AI?

மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’ தொடர்பான புதிய தகவல், சமூக வலைதள பயனர்களிடம் பெரும் அதிர்வை...

யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தின் வருடாந்திர ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட...