follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுகொழும்பில் உள்ள மதுபானக் கடைகளில் திடீர் சோதனை

கொழும்பில் உள்ள மதுபானக் கடைகளில் திடீர் சோதனை

Published on

கொழும்பு பிரதேசத்தில் மதுபானம் விற்பனை செய்யும் R.B.04 உரிமம் பெற்ற பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாதுகாப்பு முத்திரைகள் இல்லாத மற்றும் சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு முத்திரையுடன் கூடிய வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, பாதுகாப்பு முத்திரை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட உரிமம் பெற்ற வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

குறித்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மேலதிக விசாரணைகளுக்காக மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹேமசிறி பெர்னாண்டோ – பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்கவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையை நிறைவேற்றத் தவறியதற்காக...

உரிய தகவல்கள் இல்லாத உப்பு பொதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

இறக்குமதியாளர் அல்லது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சில்லறை விலை உள்ளிட்ட உரிய தகவல்கள் குறிப்பிடப்படாத உப்பு...

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...