follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு

Published on

மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

08 பெண்கள் மற்றும் 24 ஆண்களை உள்ளடக்கிய 32 இலங்கையர்கள் இன்று பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புடன் ஒருங்கிணைக்கவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் தாய்லாந்து மற்றும் மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் இந்தச் செயன்முறையை ஒருங்கிணைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...