follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2சம்பளம் வாங்கமாட்டோம் என்று உறுதியளிக்கவில்லை..- NPP எம்பி

சம்பளம் வாங்கமாட்டோம் என்று உறுதியளிக்கவில்லை..- NPP எம்பி

Published on

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் பற்றி குறிப்பிட்ட உண்மைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

எம்.பி.க்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருப்பதாகவும், அவர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் சம்பளம் பொது நிதியில் வரவு வைக்கப்படும், அதனால் தனக்கு போதிய அளவு கொடுப்பனவு கிடைக்கும் என தெரண தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘Wada Pitiya’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

மேலும் இது குறித்து எதிர்கட்சிகள் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்றும், இதற்கு முன்னர் இருந்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் கூட இம்முறையில் தமது சம்பளத்தினை பொது நிதியில் வரவு வைத்ததாகவும் அவர்கள் எந்த நெருக்கடிக்கும் முகங்கொடுக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...